ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே யாரும் எதிர்பாராத வகையில் நமிதா மாரிமுத்து வெளியேறிவுள்ளார்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவராக திருநங்கை நமிதா மாரிமுத்துவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. நமிதாவின் சோகக்கதையை கேட்ட பலரும் அவருடைய அனுதாபியாக மாறியிருந்தார்கள். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா போட்டியை விட்டு விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய எபிசோடில் இது பற்றி பேசிய கமல், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி, ஏன் நானும் கூட நமிதா மாரிமுத்துவிடம் மனதை பறிகொடுத்துவிட்டோம். இப்படி ஒரு பிரதிநிதி மிகவும் முக்கியம் என நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். தொடர் இடர் வந்தாலும் வெற்றிகளை தேடி பெற்ற நமிதா இதுபோலவே செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என கமல் கூறியுள்ளார். காரணங்கள் சரிவர தெரியாத நிலையில் முதல் வாரத்திலேயே நமிதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.