பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

தற்போதைய முன்னணி காமெடியனான யோகிபாபு தீவிரமான ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் அங்குள்ள முருகன் கோயில்களை தேடிச் சென்று சாமிதரிசனம் செய்கிறார்.
அதோடு, தனது சொந்த ஊரில் வராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ள யோகிபாபு, குடும்பத்துடன் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்தநிலையில், கலகலப்பு-2 படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர்.சிக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.




