ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'அண்ணாத்த, சாணி காயிதம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா அலைகளின் காரணமாக பல சினிமா பிரபலங்கள் எந்த வெளிநாட்டிற்கும் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். ஆனாலும், பல நடிகைகள் பக்கத்தில் உள்ள மாலத் தீவிற்குச் சென்று வந்தார்கள். அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை தங்கள் அழகால் அதிசயிக்க வைத்தார்கள்.
கீர்த்தி சுரேஷ் இப்போது தன்னுடைய விடுமுறைக்காக ஸ்பெயின் பறந்துள்ளார். அதன் புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, “நான் இப்போது விடுமுறையில், ஒவ்வொரு நாளும் தான், ஏனென்றால் நான் எனது தொழிலை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் படப்பிடிப்பிற்காகத்தான் கீர்த்தி தற்போது ஸ்பெயின் சென்றுள்ளார். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.