ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம். சில தினங்களுக்கு முன்பு இருவரும் தங்களது பிரிவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சினிமா பிரபலங்கள் யாரும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடவில்லை.
ஆனால், 'தலைவி' பட நாயகியான கங்கனா ரணவத், அவர்கள் பிரிவு குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆண்கள் செய்யும் தவறுகளால்தான் விவகாரத்துக்கள் ஏற்படுகின்றன என்று கூறியிருந்தார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நாக சைதன்யா பழக ஆரம்பித்த பிறகு இது நடந்திருக்கிறது. அந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்துக்கு திறமையானர் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆமீர் கானுடன் நாக சைதன்யா ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அவரைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நாக சைதன்யாவின் மாமாவான தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இன்ஸ்டா ஸ்டோரியில், “நாம் வாயைத் திறப்பதற்கு முன் நம் மனதைத் திறக்க வேண்டும். மனம் என்பது எண்ணங்களின் போக்குவரத்து. உங்கள் வழியை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கங்கனாவுக்குத்தான் வெங்கடேஷ் இப்படி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்கிறது டோலிவுட் வட்டாரம். எந்தவிதமான சர்ச்சைப் பதிவுகளையும் பதிவிடாத வெங்கடேஷ் இப்படி பதிவிட்டிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.