நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் தமிழில் கர்ணன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்திலும் நாயகியாக நடித்தார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‛பைசன்' படத்தில் ஹீரோ துருவ் அக்காவாக நடிக்கிறார்.
இது குறித்து அவர் கூறியது, ‛‛கர்ணன் படத்துக்குபின் அடுத்த படங்களில் நடிக்க இயக்குனர் மாரி செல்வராஜ் என்னை கூப்பிடவில்லை. பைசன் படத்துக்கு அழைத்து தயங்கி பேசினார். ஹீரோவிற்கு அக்காவாக நடிக்க முடியுமா என்றார். நானோ அக்கா, தங்கை, அம்மா என எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என்றேன். இந்த படத்துக்காக மீண்டும் திருநெல்வேலி சென்றேன். நான் மலையாளி என்றாலும், அந்த மக்கள் அன்பால் அந்த ஊர் ஆளாக மாறிவிட்டேன். நான் ஒரு காட்சியில் நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்தபோது உடனே கூலிங் கிளாஸ் உடன் குதித்து என்னை காப்பாற்றினார் இயக்குனர் மாரி செல்வராஜ்'' என்றார்.