தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கள் கதைக்கான ஹீரோக்கள் கிடைக்காதபோதோ அல்லது ஹீரோக்களுக்கு கிடைக்கும் வசதிகள், மரியாதையை பார்க்கும்போதோ தாங்களும் ஹீரோவாகி விடலாம் என்கிற எண்ணம் சில இயக்குனர்களுக்கு ஏற்படும். இயக்குனர் சேரன், பிரவீன் காந்தி முதல் ஹரஹர மகாதேவகி இயக்குனர் சந்தோஷ் வரை இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக அரிதாரம் பூசியவர்கள் தான். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் கோமாளி இயக்குனர்.. அதாவது கோமாளி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன்பு அம்னீசியா என்கிற நோயை பின்னணியாகக் கொண்டு கோமாளி என்கிற படத்தை கலகலப்பாக உருவாக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டு வருடங்களாகியும் அவரது புதிய பட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் அதனால்தான் அவரது இரண்டாவது படம் இவ்வளவு தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.