இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் அறிமுகமாகி சில பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்து குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர். தற்போது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் 'புஷ்பா' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர அறிமுகப் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டார்கள்.
'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கும் அந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே அச்சு அசல் கிராமத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார் ராஷ்மிகா. நிறைய எண்ணெய்யுடன் கூடிய அழுந்த வாரிய தலை, ஒரு பக்க மூக்குத்தி, புடவை அணிவதற்கு முன்பாக தன்னை அழுகுபடுத்திக் கொள்ளும் விதத்தில் காதில் கம்மள் அணியும் ராஷ்மிகா, உட்கார்ந்திருக்கும் விதமே அப்படியே கிராமத்துப் பெண் போலவே உள்ளது.
திருமணத்திற்கு முன்பு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாரா அல்லது ஏதோ ஒரு விசேஷத்திற்கு செல்வதற்காக இந்த அலங்காரமா என்பது தெரியவில்லை. பக்கா மாடர்ன் பெண்ணான ராஷ்மிகாவை இப்படி மாற்றிவிட்டார்களே என ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.