டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா தமிழில் கதாநாயகியா அறிமுகமான 'பாணா கதாத்தாடி' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அதற்கு முன்பு நடித்த சமந்தா, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாக அங்கு அறிமுகமானார்.
அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்த சமந்தா, ஹைதராபாத்தில் வசிக்க ஆரம்பித்தார். தனது முதல் தெலுங்குப் படத்தில் ஜோடியாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் 'சாட்' செய்த சமந்தா ரசிகர் ஒருவர் “நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாறுகிறீர்களா' எனக் கேட்ட கேள்விக்கு, “எப்படி இப்படி வதந்தி ஆரம்பமானது எனத் தெரியவில்லை. இது போல 100 வதந்திகள் இருக்கிறது, எதுவும் உண்மையில்லை. ஐதராபாத் தான் எனது வீடு, எப்போதும் எனக்கு வீடு. ஐதராபாத் தான் எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது, நான் இங்கேயே தான் வசிப்பேன்,” என பதிலளித்துள்ளார்.
இதனிடையே நாக சைதன்யா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லவ் ஸ்டோரி' படத்தின் வெற்றி விழாவில் நாகார்ஜுனா கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த விழாவில் கூட சமந்தா கலந்து கொள்ளவில்லை. இதையும் கூட சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
நாக சைதன்யா, சமந்தா இருவரும் வெளிப்படையாகப் பேசும் வரை இது போன்ற பரபரப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.