இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா தமிழில் கதாநாயகியா அறிமுகமான 'பாணா கதாத்தாடி' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அதற்கு முன்பு நடித்த சமந்தா, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாக அங்கு அறிமுகமானார்.
அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்த சமந்தா, ஹைதராபாத்தில் வசிக்க ஆரம்பித்தார். தனது முதல் தெலுங்குப் படத்தில் ஜோடியாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் 'சாட்' செய்த சமந்தா ரசிகர் ஒருவர் “நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாறுகிறீர்களா' எனக் கேட்ட கேள்விக்கு, “எப்படி இப்படி வதந்தி ஆரம்பமானது எனத் தெரியவில்லை. இது போல 100 வதந்திகள் இருக்கிறது, எதுவும் உண்மையில்லை. ஐதராபாத் தான் எனது வீடு, எப்போதும் எனக்கு வீடு. ஐதராபாத் தான் எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது, நான் இங்கேயே தான் வசிப்பேன்,” என பதிலளித்துள்ளார்.
இதனிடையே நாக சைதன்யா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லவ் ஸ்டோரி' படத்தின் வெற்றி விழாவில் நாகார்ஜுனா கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த விழாவில் கூட சமந்தா கலந்து கொள்ளவில்லை. இதையும் கூட சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
நாக சைதன்யா, சமந்தா இருவரும் வெளிப்படையாகப் பேசும் வரை இது போன்ற பரபரப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.