'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் கூட பேமிலிமேன்-2 என்ற வெப் தொடர் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதில் சமந்தா இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய எதிர்ப்புகள் எழுந்தது, என்றாலும் அது வெளியானது.
இந்த நிலையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவரான நடிகை லாஸ்லியாவிடத்தில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நீங்கள் இலங்கை பிரச்சினையை மையமாக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே மட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் இலங்கையில் வாழ்ந்தவள் என்ற முறையில் அங்கு நடந்த கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த சம்பவங்களை உயிருள்ள வரை என்னால் மறக்க முடியாது. அதனால் அதுபோன்ற ஒரு கதைகளில் நடிப்பதைகூட எனது மனம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்த லாஸ்லியா, அடுத்தபடியாக ஆரியுடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.