ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் கூட பேமிலிமேன்-2 என்ற வெப் தொடர் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதில் சமந்தா இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய எதிர்ப்புகள் எழுந்தது, என்றாலும் அது வெளியானது.
இந்த நிலையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவரான நடிகை லாஸ்லியாவிடத்தில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நீங்கள் இலங்கை பிரச்சினையை மையமாக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே மட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் இலங்கையில் வாழ்ந்தவள் என்ற முறையில் அங்கு நடந்த கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த சம்பவங்களை உயிருள்ள வரை என்னால் மறக்க முடியாது. அதனால் அதுபோன்ற ஒரு கதைகளில் நடிப்பதைகூட எனது மனம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்த லாஸ்லியா, அடுத்தபடியாக ஆரியுடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.