ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. தொடர்ந்து தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள லாஸ்லியா, அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நிகழ்ந்த மிக சோகமான நிகழ்வு பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
தனது அப்பாவை மிகவும் நேசித்த லாஸ்லியா, ''அப்பாவின் மறைவு நாங்கள் எதிர்பார்க்காதது. கடைசியாக நான் எனது அப்பாவை பார்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அதன்பின் அவரை நான் பிணமாக தான் பார்த்தேன். கன்னடாவுக்கு சென்ற எனது அப்பா அங்கேயே இறந்துவிட்டார். அவரது உடலை நேரடியாக இலங்கைக்கு தான் கொண்டு வந்தார்கள். அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகு தான் சில நாட்கள் கழித்து தான் கொண்டு வந்தார்கள். இரவு நேரத்தில் வந்ததால் போலீஸார் எனது அப்பாவின் உடலை எங்களிடம் தர மறுத்துவிட்டனர்.
இரவு 2 மணிக்கு தனி ஒரு பெண்ணாக போலீஸிடம் போராடினேன். தனியாக இருப்பதால் பாவம் பார்த்து அப்பாவின் உடலை என்னிடம் தர சம்மதித்தனர். அதன்பிறகு தான் சொந்த ஊருக்கு கொண்டு சென்று காரியம் செய்தோம். அந்த கஷ்டம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது'' என்று தந்தையை நினைத்து மிகவும் மனம் வருந்தி அந்த பேட்டியில் லாஸ்லியா பேசியுள்ளார்.