சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. தொடர்ந்து தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள லாஸ்லியா, அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நிகழ்ந்த மிக சோகமான நிகழ்வு பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
தனது அப்பாவை மிகவும் நேசித்த லாஸ்லியா, ''அப்பாவின் மறைவு நாங்கள் எதிர்பார்க்காதது. கடைசியாக நான் எனது அப்பாவை பார்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அதன்பின் அவரை நான் பிணமாக தான் பார்த்தேன். கன்னடாவுக்கு சென்ற எனது அப்பா அங்கேயே இறந்துவிட்டார். அவரது உடலை நேரடியாக இலங்கைக்கு தான் கொண்டு வந்தார்கள். அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகு தான் சில நாட்கள் கழித்து தான் கொண்டு வந்தார்கள். இரவு நேரத்தில் வந்ததால் போலீஸார் எனது அப்பாவின் உடலை எங்களிடம் தர மறுத்துவிட்டனர்.
இரவு 2 மணிக்கு தனி ஒரு பெண்ணாக போலீஸிடம் போராடினேன். தனியாக இருப்பதால் பாவம் பார்த்து அப்பாவின் உடலை என்னிடம் தர சம்மதித்தனர். அதன்பிறகு தான் சொந்த ஊருக்கு கொண்டு சென்று காரியம் செய்தோம். அந்த கஷ்டம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது'' என்று தந்தையை நினைத்து மிகவும் மனம் வருந்தி அந்த பேட்டியில் லாஸ்லியா பேசியுள்ளார்.