நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. தொடர்ந்து தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள லாஸ்லியா, அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நிகழ்ந்த மிக சோகமான நிகழ்வு பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
தனது அப்பாவை மிகவும் நேசித்த லாஸ்லியா, ''அப்பாவின் மறைவு நாங்கள் எதிர்பார்க்காதது. கடைசியாக நான் எனது அப்பாவை பார்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அதன்பின் அவரை நான் பிணமாக தான் பார்த்தேன். கன்னடாவுக்கு சென்ற எனது அப்பா அங்கேயே இறந்துவிட்டார். அவரது உடலை நேரடியாக இலங்கைக்கு தான் கொண்டு வந்தார்கள். அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகு தான் சில நாட்கள் கழித்து தான் கொண்டு வந்தார்கள். இரவு நேரத்தில் வந்ததால் போலீஸார் எனது அப்பாவின் உடலை எங்களிடம் தர மறுத்துவிட்டனர்.
இரவு 2 மணிக்கு தனி ஒரு பெண்ணாக போலீஸிடம் போராடினேன். தனியாக இருப்பதால் பாவம் பார்த்து அப்பாவின் உடலை என்னிடம் தர சம்மதித்தனர். அதன்பிறகு தான் சொந்த ஊருக்கு கொண்டு சென்று காரியம் செய்தோம். அந்த கஷ்டம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது'' என்று தந்தையை நினைத்து மிகவும் மனம் வருந்தி அந்த பேட்டியில் லாஸ்லியா பேசியுள்ளார்.