மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
நாளைய மனிதன், பவர் ஆப் உமன் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் ஜெயதேவி. இவருக்கு பிரான்சில் உள்ள செயிண்ட் டேனிஷ் நகர மேயர் புதிய கவுரவத்தை வழங்கி இருக்கிறார். அங்கு வாழும் தமிழ் அமைப்புகள் ஜெயதேவியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. அதை ஏற்று அங்கு சென்றார் ஜெயதேவி. அவருக்கு அங்கு பாராட்டு விழா நடந்தது. அவர் இயக்கிய பவர் ஆப் உமன் திரைப்படமும் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஜெயதேவியை டேனிஷ் நகர மேயர் லினோனி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து டேனிஷ் நகரில் திரையிட வேண்டும் அதற்காக உங்களை டேனிஷ் நகரத்தின் இந்திய சினிமா தூதராக நியமிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயதேவி கூறும்போது "எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்தேன். 15 படங்கள் இயக்கிய எனக்கு ஒரு கலைமாமணி விருதுகூட தரவில்லை. பவர் ஆப் உமன் படத்துக்கு மட்டும் மாநில விருது கிடைத்தது. சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் எனக்கு இந்த புதிய கவுரவமும், பாராட்டும் ஆறுதலை அளித்துள்ளது" என்றார்.