75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? |
நாளைய மனிதன், பவர் ஆப் உமன் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் ஜெயதேவி. இவருக்கு பிரான்சில் உள்ள செயிண்ட் டேனிஷ் நகர மேயர் புதிய கவுரவத்தை வழங்கி இருக்கிறார். அங்கு வாழும் தமிழ் அமைப்புகள் ஜெயதேவியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. அதை ஏற்று அங்கு சென்றார் ஜெயதேவி. அவருக்கு அங்கு பாராட்டு விழா நடந்தது. அவர் இயக்கிய பவர் ஆப் உமன் திரைப்படமும் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஜெயதேவியை டேனிஷ் நகர மேயர் லினோனி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து டேனிஷ் நகரில் திரையிட வேண்டும் அதற்காக உங்களை டேனிஷ் நகரத்தின் இந்திய சினிமா தூதராக நியமிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயதேவி கூறும்போது "எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்தேன். 15 படங்கள் இயக்கிய எனக்கு ஒரு கலைமாமணி விருதுகூட தரவில்லை. பவர் ஆப் உமன் படத்துக்கு மட்டும் மாநில விருது கிடைத்தது. சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் எனக்கு இந்த புதிய கவுரவமும், பாராட்டும் ஆறுதலை அளித்துள்ளது" என்றார்.