சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
நாளைய மனிதன், பவர் ஆப் உமன் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் ஜெயதேவி. இவருக்கு பிரான்சில் உள்ள செயிண்ட் டேனிஷ் நகர மேயர் புதிய கவுரவத்தை வழங்கி இருக்கிறார். அங்கு வாழும் தமிழ் அமைப்புகள் ஜெயதேவியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. அதை ஏற்று அங்கு சென்றார் ஜெயதேவி. அவருக்கு அங்கு பாராட்டு விழா நடந்தது. அவர் இயக்கிய பவர் ஆப் உமன் திரைப்படமும் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஜெயதேவியை டேனிஷ் நகர மேயர் லினோனி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து டேனிஷ் நகரில் திரையிட வேண்டும் அதற்காக உங்களை டேனிஷ் நகரத்தின் இந்திய சினிமா தூதராக நியமிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயதேவி கூறும்போது "எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்தேன். 15 படங்கள் இயக்கிய எனக்கு ஒரு கலைமாமணி விருதுகூட தரவில்லை. பவர் ஆப் உமன் படத்துக்கு மட்டும் மாநில விருது கிடைத்தது. சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் எனக்கு இந்த புதிய கவுரவமும், பாராட்டும் ஆறுதலை அளித்துள்ளது" என்றார்.