‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. அக்குழுவினருக்கு தெலுங்குத் திரையுலகம் சார்பில் இன்னும் எந்த ஒரு பாராட்டு விழாவும் நடத்தவில்லை. ஆனால், நேற்று தனது மகன் ராம்சரண் பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டில் நடந்த பார்ட்டியில் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரை அழைத்து கவுரவித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
நிகழ்வில், இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி, இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பாளர் தனய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தினர், நடிகர் வெங்கடேஷ், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
“அன்பானவர்கள் முன்னிலையில் எங்கள் ஆஸ்கர் வெற்றியாளர்களை கவுரவப்படுத்தியதுதான் ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் உண்மையான கொண்டாட்டம். இந்திய சினிமாவுக்காக தெலுங்கர்கள் செய்த இந்த சாதனை வரலாற்றில் நிலைத்து நிற்கும்,” என இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.