கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. அக்குழுவினருக்கு தெலுங்குத் திரையுலகம் சார்பில் இன்னும் எந்த ஒரு பாராட்டு விழாவும் நடத்தவில்லை. ஆனால், நேற்று தனது மகன் ராம்சரண் பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டில் நடந்த பார்ட்டியில் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரை அழைத்து கவுரவித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
நிகழ்வில், இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி, இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பாளர் தனய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தினர், நடிகர் வெங்கடேஷ், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
“அன்பானவர்கள் முன்னிலையில் எங்கள் ஆஸ்கர் வெற்றியாளர்களை கவுரவப்படுத்தியதுதான் ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் உண்மையான கொண்டாட்டம். இந்திய சினிமாவுக்காக தெலுங்கர்கள் செய்த இந்த சாதனை வரலாற்றில் நிலைத்து நிற்கும்,” என இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.