ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய கிளாமர் விமர்சனம் : மன்னிப்பு கேட்ட 'பெத்தி' இயக்குனர் |

தெலுங்கு திரையுலகமே ஆச்சரியமாக பார்க்கும் ஒரு விஷயம் தற்போது பவன் கல்யாணை வைத்து தமிழ் இயக்குனர் சமுத்திரக்கனி படம் இயக்கி வருவதும், அந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெற்று வருவதையும் தான். காரணம் இதற்கு முன்பாக இயக்குனர் கிரிஷ் டைரக்ஷனில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பவன் கல்யாண் நடித்து வரும் ஹரிஹர வீரமல்லு திரைப்படம் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. அதைத்தொடர்ந்து அவரது படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஹரிஷ் சங்கர் காத்திருக்கும் நிலையில் திடீரென சமுத்திரக்கனியின் டைரக்ஷனில் பவன் கல்யாண் நடிப்பதாக வெளியான அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக தான் இருந்தது.
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான வினோதய சித்தம் என்கிற படத்தின் கதை பவன் கல்யாணுக்கு பிடித்து போக, இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பப்பட்ட பவன் கல்யாண் தெலுங்கிலும் சமுத்திரக்கனியையே இயக்க சொல்லிவிட்டார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன் இளம் நடிகர் சாய் தரம் தேஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது பவன் கல்யாண் சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன என்கிற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி. வரும் ஜூலை 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.