தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

தெலுங்கு திரையுலகமே ஆச்சரியமாக பார்க்கும் ஒரு விஷயம் தற்போது பவன் கல்யாணை வைத்து தமிழ் இயக்குனர் சமுத்திரக்கனி படம் இயக்கி வருவதும், அந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெற்று வருவதையும் தான். காரணம் இதற்கு முன்பாக இயக்குனர் கிரிஷ் டைரக்ஷனில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பவன் கல்யாண் நடித்து வரும் ஹரிஹர வீரமல்லு திரைப்படம் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. அதைத்தொடர்ந்து அவரது படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஹரிஷ் சங்கர் காத்திருக்கும் நிலையில் திடீரென சமுத்திரக்கனியின் டைரக்ஷனில் பவன் கல்யாண் நடிப்பதாக வெளியான அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக தான் இருந்தது.
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான வினோதய சித்தம் என்கிற படத்தின் கதை பவன் கல்யாணுக்கு பிடித்து போக, இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பப்பட்ட பவன் கல்யாண் தெலுங்கிலும் சமுத்திரக்கனியையே இயக்க சொல்லிவிட்டார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன் இளம் நடிகர் சாய் தரம் தேஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது பவன் கல்யாண் சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன என்கிற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி. வரும் ஜூலை 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.