Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் படப்பிடிப்பு நடப்பது காட்டில் அல்ல... தனியார் இடத்தில் தான் : அருண் மாதேஸ்வரன் காட்டம்

28 மார், 2023 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Arun-Matheswaran-clarification-about-Captain-miller-shooting-issue

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக திருநெல்வேலி அருகில் உள்ள களக்காடு உள்ளிட்ட வனப்பகுதிக்கு அருகில் நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்த படக்குழுவினர் அரசிடம் முறையாக அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் படப்பிடிப்பு நடத்துவதற்காக குற்றாலத்தில் இருந்து நீர் வரும் ஆதார வழித்தடங்களை சேதப்படுத்தியதாகவும் காட்டில் படப்பிடிப்பு நடத்துவதால் அருகில் உள்ள வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி உள்ளூர் மக்கள் சிலரும் சமூக ஆர்வலர்கள் சிலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கியதோடு இதுகுறித்து வனத்துறையிடம் முறையிட போவதாகவும் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது, இரண்டரை மாதங்களுக்கு மேலாக இந்த பகுதியில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்துவது காட்டில் அல்ல.. தனியாருக்கு சொந்தமான இடத்தில் தான்.. அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் முறையான அனுமதி பெற்று தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தில் இவ்வளவு பெரிய செட் அமைத்து படமாக்கி வருகிறோம் என்றால் அது அதிகாரிகளின் முறையான அனுமதி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. இப்போது திடீரென இந்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது. இதுகுறித்து படத்தை தயாரித்து வரும் நிறுவனம் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி இது குறித்த சிக்கல்களை சரி செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. அதேசமயம் எங்களது படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கை ஒரே நாளில் திரும்பப்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கை ... பவன் கல்யாண் காட்சிகளை படமாக்கி முடித்த சமுத்திரக்கனி பவன் கல்யாண் காட்சிகளை படமாக்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in