மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தொலைக்காட்சிகளுக்கு இடையே நடக்கும் டிஆர்பி போட்டியில் புதுப்புது சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் ஒளிபரப்பும் நிகழ்ச்சி தான் சர்வைவர். ஆக்ஷன் கிங் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதில் ஒருவராக விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டுள்ளார்.
இளைஞர்களின் புது கிரஷாக மாறியுள்ள ஐஸ்வர்யா தனக்கு சர்வைவர் வாய்ப்பு கிடைத்தது குறித்து ஒரு பேட்டியில் முன்னதாக தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர், 'பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இன்ஸ்டாவில் சில ஸ்டண்ட் வீடியோக்களை அப்லோட் செய்திருந்தேன். என்னுடைய அந்த ஸ்டண்ட் வீடியோக்களை பார்த்த ஜீ தமிழ் நிர்வாகம் என்னை அழைத்து சர்வைவர் ஷோவில் கலந்து கொள்ள சொன்னார்கள். அதன் பின் நேரடியாக இண்டர்வியூ நடந்தது. இப்படி தான் எனக்கு சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என கூறியுள்ளார்.