ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் 1993ல் வெளிவந்த 'பொன்னுமணி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சௌந்தர்யா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் 'அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, இவன்' உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். 2004ம் ஆண்டு பாஜகவிற்காக தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “சிறு வயதிலிருந்தே என்னைப் பார்த்து சவுந்தர்யா போல இருப்பதாக அப்பா சொல்வார். அதனால், அவர் மீது எனக்கு சிறு வயது முதலே அதிக ப்ரியம் உண்டு. அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது,” என்றும் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் சமீப காலத்தில் நடிகை சாவித்ரி, நடிகை ஜெயலலிதா ஆகியோரது பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் சவுந்தர்யா பயோபிக்கை யாராவது தயாரிக்க முன் வருவார்களா என்பது இனிமேல் தான் தெரியும். ஒருவேளை ராஷ்மிகா அதில் நடிக்கத் தயாராக இருப்பதால் சீக்கிரம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.