ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழில் 1993ல் வெளிவந்த 'பொன்னுமணி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சௌந்தர்யா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் 'அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, இவன்' உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். 2004ம் ஆண்டு பாஜகவிற்காக தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “சிறு வயதிலிருந்தே என்னைப் பார்த்து சவுந்தர்யா போல இருப்பதாக அப்பா சொல்வார். அதனால், அவர் மீது எனக்கு சிறு வயது முதலே அதிக ப்ரியம் உண்டு. அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது,” என்றும் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் சமீப காலத்தில் நடிகை சாவித்ரி, நடிகை ஜெயலலிதா ஆகியோரது பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் சவுந்தர்யா பயோபிக்கை யாராவது தயாரிக்க முன் வருவார்களா என்பது இனிமேல் தான் தெரியும். ஒருவேளை ராஷ்மிகா அதில் நடிக்கத் தயாராக இருப்பதால் சீக்கிரம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.