பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு |
தமிழில் 1993ல் வெளிவந்த 'பொன்னுமணி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சௌந்தர்யா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் 'அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, இவன்' உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். 2004ம் ஆண்டு பாஜகவிற்காக தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “சிறு வயதிலிருந்தே என்னைப் பார்த்து சவுந்தர்யா போல இருப்பதாக அப்பா சொல்வார். அதனால், அவர் மீது எனக்கு சிறு வயது முதலே அதிக ப்ரியம் உண்டு. அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது,” என்றும் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் சமீப காலத்தில் நடிகை சாவித்ரி, நடிகை ஜெயலலிதா ஆகியோரது பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் சவுந்தர்யா பயோபிக்கை யாராவது தயாரிக்க முன் வருவார்களா என்பது இனிமேல் தான் தெரியும். ஒருவேளை ராஷ்மிகா அதில் நடிக்கத் தயாராக இருப்பதால் சீக்கிரம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.