ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சதீஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு நாய் சேகர் என்ற பெயரை பதிவு செய்துவிட்டதால் அந்தப் பெயரை வடிவேலு படத்திற்கு வைக்க சிக்கல் உருவானது.
இதனிடையே, சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் பார்வையை இன்று மாலை சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிடுகிறார்கள். அப்போது படத்தின் பெயர் யாருக்கு என்பது தெரிந்துவிடும்.
நாய் சேகர் என்பது சுராஜ் இயக்கத்தில், சுந்தர் சி கதாநாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர். அந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையும், அந்தக் கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதிந்த ஒன்று. அந்தப் பெயர் வடிவேலு நடிக்கும் படத்திற்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
அந்தப் பெயரையும், கதாபாத்திரத்தையும் சுராஜ், வடிவேலு ஆகியோர் இணைந்து தான் உருவாக்கியிருப்பார்கள். அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்துவதற்குத்தான் நியாயமான உரிமை உள்ளதென்றும் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
வடிவேலுவின் பல நகைச்சுவை வசனங்கள் பாடல்களிலும், படங்களிலும் பல்வேறு விதங்களில் மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நியாயமாக அவரிடம் அதற்கு அனுமதி பெற்றுத்தான் மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும். சதீஷ் படக்குழுவினர் என்ன செய்துள்ளார்கள் என்பது இன்று மாலை தெரியப் போகிறது.