22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இசை அமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராக மாறினார். ஆனால் இசையில் பெற்ற வெற்றியை நடிப்பில் பெற முடியவில்லை. ஜான் ஏறினால் முழும் சறுக்கிற பழமொழி அவருக்குத்தான் சரியாக பொருந்தும். கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிவப்பு பச்சை மஞ்சள் என்ற படம்தான் கடைசியாக அவருக்கு கவனிக்கத் தக்க படமாக அமைந்தது.
அவர் நடித்து முடித்துள்ள ஐங்கரன், ஜெயில், அடங்காதே, 4ஜி, பேச்சுலர், ஆயிரம் ஜென்மங்கள் படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. காதலை தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை படங்கள் கைவசம் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள செல்பி படம் வெளிவரும் முயற்சியில் இருக்கிறது. வர்ஷா பொல்லம்மா ஹீரோயினாக நடித்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படம் ஜி.பி.பிரகாசுக்கு திருப்பம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.