அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
திரைப் பிரபலங்களுடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் எப்போதும் எந்த இடம் என்று பார்க்காமல் கூட ஆவலோடு முண்டியடிப்பார்கள். சிவகுமார், உன்னி முகுந்தன், பாலகிருஷ்ணா போன்ற சில நடிகர்கள் ரசிகர்களின் செல்போனை தட்டி விட்டதையும் ரசிகர்கள் இடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டதையும் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் அமைதியே உருவான இயக்குனர் ராஜமவுலி கூட தன்னிடம் செல்பி எடுக்க வந்த ஒருவரை தள்ளிவிட்டு காரில் ஏறி செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபல வில்லன் மற்றும் குணசசித்திர நடிகரான போட்டோ சீனிவாச ராவ் இன்று (ஜூலை 13) காலமானார் இவர் தமிழில் 'சாமி, கோ' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர். தெலுங்கு திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் இவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்துடன் கோட்டா சீனிவாசராவ் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் வெளியே வந்து தனது காரில் ஏறிச் செல்வதற்கு முயன்றார்.
அப்போது ஒரு ரசிகர் அவரை பின் தொடர்ந்தபடி மதிப்பு செல்பி எடுக்க முயன்றார். ஒரு கட்டத்தில் அவரை மறித்து செல்பி எடுக்க முயற்சிக்கவே, இப்படிப்பட்ட சமயத்திலா செல்பி எடுப்பது என்பது போன்று அவரை கடிந்துகொண்டு கோபம் காட்டிய ராஜமவுலி அவரை இடது கையால் திட்டி தள்ளி விட்டு தனது காரில் ஏறிச் சென்றார். துக்க நிகழ்வுகளில் கூட இப்படி அஞ்சலி செலுத்த வரும் பிரபலங்களிடம் செல்பி எடுக்கும் மனப்பான்மையை எப்போதுதான் ரசிகர்கள் கைவிடுவார்களோ.?