ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு படங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல பெண்களின் அழகு சாதன பொருட்களுக்காக '9 ஸ்கின்' என்கிற ஒரு சரும பராமரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக லேட்டஸ்ட்டாக 'ஸ்கின்ட்ரெல்லா' என்கிற ஒரு புராடக்ட்-ஐ சமீபத்தில் மும்பையில் விழா ஒன்றை நடத்தி அறிமுகப்படுத்தினார் நயன்தாரா.
இந்த நிகழ்வின் போது கீழே நின்ற மூன்று பெண்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பி அதே சமயம் தயக்கத்துடன் நிற்பதை கவனித்த நயன்தாரா உடனடியாக விழா ஏற்பாட்டாளர் ஒருவரை அழைத்து அவர்கள் மூவரையும் கைகாட்டி மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். அப்படி வந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார் நயன்தாரா. இப்படி நயன்தாரா தங்களைக் கவனித்து மேடைக்கு வரவழைத்து புகைப்படம் எடுப்பார் என எதிர்பாராத இந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.