ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது 'பீனிக்ஸ் வீழான்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து விடுதலை-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் எனது தந்தை தினமும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணி கொடுக்கிறார். அது எனது செலவுக்கே போதவில்லை. அதனால் தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகர் மகன் ஏன் நடிகராக வேண்டும்? வேறு தொழில் செய்யக்கூடாதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். ஆனால் நடிகர் மகன் மட்டும் ஏன் நடிகராக கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கும் சூர்யா சேதுபதி, நடிகரின் மகன் என்பதால் சான்ஸ் மட்டும்தான் கிடைக்கும். கடினமாக உழைத்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். அதனால் பீனிக்ஸ் வீழான் படத்தில் கடினமான நடிப்பை கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.