கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது 'பீனிக்ஸ் வீழான்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து விடுதலை-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் எனது தந்தை தினமும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணி கொடுக்கிறார். அது எனது செலவுக்கே போதவில்லை. அதனால் தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகர் மகன் ஏன் நடிகராக வேண்டும்? வேறு தொழில் செய்யக்கூடாதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். ஆனால் நடிகர் மகன் மட்டும் ஏன் நடிகராக கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கும் சூர்யா சேதுபதி, நடிகரின் மகன் என்பதால் சான்ஸ் மட்டும்தான் கிடைக்கும். கடினமாக உழைத்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். அதனால் பீனிக்ஸ் வீழான் படத்தில் கடினமான நடிப்பை கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.