'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது 'பீனிக்ஸ் வீழான்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து விடுதலை-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் எனது தந்தை தினமும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணி கொடுக்கிறார். அது எனது செலவுக்கே போதவில்லை. அதனால் தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகர் மகன் ஏன் நடிகராக வேண்டும்? வேறு தொழில் செய்யக்கூடாதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். ஆனால் நடிகர் மகன் மட்டும் ஏன் நடிகராக கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கும் சூர்யா சேதுபதி, நடிகரின் மகன் என்பதால் சான்ஸ் மட்டும்தான் கிடைக்கும். கடினமாக உழைத்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். அதனால் பீனிக்ஸ் வீழான் படத்தில் கடினமான நடிப்பை கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.