ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் மரேடுமல்லி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கனமழை காரணமாக காக்கிநாடா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
இதனை தொடர்ந்து புதிய லொக்கேசனுக்கு காரில் பயணித்த அல்லு அர்ஜுன், வழியில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த சாதாரண ஹோட்டல் ஒன்றை கண்டதும் காரை நிறுத்த சொல்லி, அங்கே உணவருந்தினார். அதன்பின் வெளியே வந்த அவர், கடைக்காரர் வேண்டாம் என்று மறுத்தும் அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சாலையோர கடையில் சாப்பிட்ட அல்லு அர்ஜுனின் எளிமையை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.