இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் மரேடுமல்லி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கனமழை காரணமாக காக்கிநாடா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
இதனை தொடர்ந்து புதிய லொக்கேசனுக்கு காரில் பயணித்த அல்லு அர்ஜுன், வழியில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த சாதாரண ஹோட்டல் ஒன்றை கண்டதும் காரை நிறுத்த சொல்லி, அங்கே உணவருந்தினார். அதன்பின் வெளியே வந்த அவர், கடைக்காரர் வேண்டாம் என்று மறுத்தும் அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சாலையோர கடையில் சாப்பிட்ட அல்லு அர்ஜுனின் எளிமையை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.