நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கடந்த 2002-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் தான் தெலுங்கு நடிகர் கோபிசந்த். பின்னாளில் ஹீரோவாக புரமோஷன் பெற்ற இவர், அதன்பிறகு வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவே இல்லை. தற்போது தமன்னாவுடன் இணைந்து சீட்டிமார் என்கிற படத்தில் நடித்துள்ள .கோபிசந்த்திடம், அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோபிசந்த், “தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க போகிறேன். வில்லனாக நடிக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அப்படி நடித்து ஹீரோ இமேஜை நானே கெடுத்துக்கொள்ள மாட்டேன். முன்பு வில்லனாக நடித்தது கூட, என்னிடம் இருக்கும் நடிப்புத்திறமையை வெளியே காட்டுவதற்குத்தான்.. ஆனால் என்னுடைய நோக்கம் எப்போதுமே ஹீரோ ஆவதிலேயே இருந்தது” என கூறியுள்ளார்.