ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். நான் ஈ, பாகுபலி, புலி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் இவர் பிரபலமாக உள்ளார்.
சுதீப் தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நடிப்பதோடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளின் ஈடுபடுவது மூலம் ரசிகர்கள் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் சுதீப் தனது 50வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, அவரது ரசிகர்கள் கர்நாடக மாநிலம் முழுவதும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினர்.
பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கட்அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு அந்த ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எருமை மாடு ஒன்றை நிறுத்தி சுதீப், வாழ்க என்ற குரல் எழுப்பியவாறு மாட்டின் தலையை அரிவாளால் துண்டித்தனர்.
பின்னர் ரத்தத்தை எடுத்து சுதீப் கட்-அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.