Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாமி சன்னதியில் செருப்புடன் நடித்தார் : த்ரிஷா மீது போலீசில் புகார்

04 செப், 2021 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Trisha

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. டாட்டியா மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரில் நடந்து வருகிறது. நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோயில்களிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. இந்த சிலைகளுக்கு நடுவில் த்ரிஷா காலில் செருப்பு அணிந்து நடித்துள்ளார்.

இது சிவலிங்கங்களையும், இந்துக்களையும் அவமானப்படுத்துதாகும் என்றும் அதனால் நடிகை த்ரிஷா மீதும், இயக்குனர் மணிரத்னம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வித்யா மண்டல் அமைப்பின் தலைவர் தினேஷ் கட்டோர் ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சுதீப் பிறந்தநாளுக்கு எருமை மாட்டை பலி கொடுத்த ரசிகர்கள் : 25 பேர் மீது வழக்குப் பதிவுசுதீப் பிறந்தநாளுக்கு எருமை மாட்டை ... லாபம் படத்தில் சீன இசை கருவி லாபம் படத்தில் சீன இசை கருவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Bhaskaran - Chennai,இந்தியா
09 செப், 2021 - 15:34 Report Abuse
Bhaskaran பாட்டி கையில் பணம் இருக்கு அதனால் கண் தெரியாது
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
08 செப், 2021 - 07:50 Report Abuse
Vaduvooraan தமிழ் நாட்டில் நடந்திருந்தால் இதை பகுத்தறிவு புரட்சி முற்போக்கு சிந்தனை என்று ஏதாவது பெயரில் நியாயப்படுத்தி இருப்பார்கள். வடஇந்தியா வேறு மாதிரி. அங்கிருக்கும் ஹிந்துக்கள் சற்று சொரணை உள்ளவர்கள். பெரியார் மண் என்று சொல்லிக் க்கொண்டு இங்கு எப்படி வேண்டுமானாலும் ஹிந்து மதத்தை இழிவு படுத்துவது போல அங்கு செய்வது கடினம்
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
08 செப், 2021 - 07:47 Report Abuse
Vaduvooraan சினிமாக்காரர்களுக்கு காசு பணம் துட்டு மணி ..இதைத்தவிர வேறு எதை பற்றியும் அக்கறை கிடையாது மதம், வழிபாடு, நமது பாரம்பரியம் இதெல்லாம் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? ஒளிவட்டத்துக்குள் இருந்தால் சுற்றி இருக்கிற உலகமே கண்ணுக்கு தெரியாது இன்றைக்கு சாமானிய ஹிந்துக்கள் உள்ளார்ந்த கோபத்தில் இருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற அது தேர்தல் முடிவுகளில் அது தென்படாமல் போய் இருக்கலாம். ஆனால் நிச்சயம் கோபம் இருக்கத்தான் இருக்கிறது. இதை உணர்ந்தால் ஹிந்துவிரோத சக்திகளுக்கு நல்லது. விளைவுகளை சந்தித்த பின்னர் பாடம் கற்றுக்கொள்வோம் என்றால் என்ன செய்ய முடியும்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
07 செப், 2021 - 03:22 Report Abuse
meenakshisundaram இப்ப இது தானே பேஷன் ?திமுக .திக கட்சிங்க இந்த சினிமாவை விரும்பி பாப்பாங்க ?
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
05 செப், 2021 - 19:45 Report Abuse
Rajagopal அந்த செருப்பாலேயே நாலு அடி கொடுங்க ஆபீசர். சரியாயிடுவா.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in