ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப் போவதாக கடந்த வருடம் அறிவித்தார்.
ஆனால் சில காரணங்களால் பாட்டு படத்தை தள்ளிவைத்து விட்ட அல்போன்ஸ் புத்ரன், பிரித்விராஜூக்காக தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்லி, அவரிடம் சம்மதம் பெற்று அந்தப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்தும் விட்டார். கதையும் ஹீரோவும் மாறினாலும் நாயகி என்னவோ நயன்தாரா தான்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு கோல்டு என டைட்டில் வைத்துள்ளாராம் அல்போன்ஸ் புத்ரன். தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கிவரும் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இந்தப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திலேயே துவங்க இருக்கிறாராம்.