ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

மலையாள திரையுலகின் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் நடிகர் சுரேஷ்கோபி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஏற்றுமானூர் பகுதியை சேர்ந்த அஸ்வதி அசோக் என்கிற ஏழைப் பெண் ஒருவருக்கு திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாகவும் அளித்துள்ளார் சுரேஷ்கோபி.
இருபது வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த அஸ்வதிக்கு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சமயத்தில் தான் கொரோனா தாக்கம் காரணமாக திருமணத்தை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. வரும் செப்-9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் சிலர் மூலமாக சுரேஷ்கோபிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து, ஏற்றுமானூர் மகாதேவன் கோவிலில் முன்பாக வைத்து, திருமண பட்டுச்சேலையுடன் ஒரு லட்சம் ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. அவரது இந்த செயல் சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.




