‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன சேலை? என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.