'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |
தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன சேலை? என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.




