அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு |
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியுள்ளது ரசிகர்கள் பலரையும் உற்சாகம் அடைய செய்துள்ளது. வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ் நிர்வாகத்தினருடன் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல வருடங்களாக நீடித்து வந்தப் பிரச்சனைக்கு முற்றும் போடப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் புதிய படமொன்றில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் படம் அனேகமாக சுராஜ் வடிவேலுவை வைத்து இயக்கும் படமாக இருக்கலாம்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் மூன்றாவது இன்னிங்ஸ். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க மும்முரமாக பணியாற்றி வருகிறார் சுராஜ்.