மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் 'சாகுந்தலம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து இரு மொழிகளிலும் சமந்தாவைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். மேலும், வெப் சீரிஸ்களில் நடிக்கவும் கேட்டு வருகிறார்களாம். ஆனால், சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுக்கலாம் என சமந்தா முடிவு செய்துள்ளாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், “இப்போது சமந்தா 2.0 வெர்ஷனைப் பார்த்து வருகிறீர்கள். விரைவில் சமந்தா 3.0 வெர்ஷனைப் பார்ப்பீர்கள். நடிப்பதை விட மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை பெற்றுக் கொள்ள அவர் முடிவு செய்துவிட்டார் என்று வந்த தகவல்களுக்குத்தான் அப்படி பதிலளித்துள்ளாராம்.
சமீபத்தில் கோவாவில் ஒரு பார்ம் ஹவுஸை சமந்தா, நாகசைதன்யா வாங்கியுள்ளார்கள். அங்கு புதிதாக கட்டுமான வேலைகள் ஆரம்பமாக உள்ளதாம். ஒரு வேளை அதைக் கவனிப்பதற்காகவும் சமந்தா சிறிது ஓய்வெடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.