ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் தமன்னா. தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் டீகே இயக்கும் திகில் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர சீட்டிமார், கஹானி, மேஸ்ட்ரோ உள்ளிட்ட 5 தெலுங்கு படத்திலும், பிளான் ஏ பிளான் பி, போலே சுடியன் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இத்தனை பிசியான வாழ்க்கைக்கு இடையிலேயும் தற்போது புதிதாக புத்தகம் எழுதி எழுத்தாளராகவும் மாறி இருக்கிறார். அவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர் பேக் டு ரூட் (வேர்களை தேடி). பண்டைய கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகள் மூலம் நோய்களை தடுத்து ஆயுட் காலத்தை நீட்டிக்கும் வழி முறைகள் குறித்து புத்தகத்தில் அவர் எழுதி உள்ளார். அவருடன் இணைந்து லூக் கவுண்டினோகோ என்பவரும் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து தமன்னா கூறியிருப்பதாவது: இது நான் எழுதிய முதல் புத்தகம் என்பதால் அதிக மக்களை சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த புத்தகத்தின் மூலம் நமது பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். வேகமான இன்றைய உலகத்தில் மக்கள் கலாசார பண்பாட்டை அறிந்து கொள்வது முக்கியம். என்கிறார்.