சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் சாகுந்தலம் படத்தில் நடித்து வந்த சமந்தா சமீபத்தில் தான் அந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இதையடுத்து அவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் டைரக்சனில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நடிக்க துவங்கி, தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார்.
இந்தப்படத்தில் நயன்தாரா - சமந்தா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றதாம். அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரியும் அற்புதமாக ஒர்க்அவுட் ஆகியுள்ளதாம். அந்தவகையில் நயன்தாராவும் சமந்தாவும் விஜய்சேதுபதியுடன் பேருந்து படிக்கட்டில் நின்றபடியே பயணிக்கும் வீடியோ கிளிப் ஒன்று, சத்யா படத்தில் இடம் பெற்ற வளையோசை கலகலவென்று' என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.