இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
புதுமுகம் ஆனந்தன் இயக்கத்தில் உருவான சக்ரா படத்தில் விஷால் நடித்திருந்தார். விஷால் பிலிம் பேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக விஷால் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விஷால் மீது பொய்வழக்கு தொடர்ந்ததாக கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் லைக்கா நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் "நீதி வெல்லும் மற்றும் உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் 'சக்ரா' திரைப்படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்று தெரிவித்திருந்தார்.
இந்த 5 லட்சத்தை வழக்கு செலவாக லைக்கா நிறுவனம் விஷாலுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த பணத்தை ஏழை மாணவிகளின் கல்வி செலவுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு அபராதம் மூலம் கிடைக்கும் 5 லட்சத்தையும் தேவி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவேன். என்றார்.