சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
புதுமுகம் ஆனந்தன் இயக்கத்தில் உருவான சக்ரா படத்தில் விஷால் நடித்திருந்தார். விஷால் பிலிம் பேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக விஷால் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விஷால் மீது பொய்வழக்கு தொடர்ந்ததாக கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் லைக்கா நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் "நீதி வெல்லும் மற்றும் உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் 'சக்ரா' திரைப்படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்று தெரிவித்திருந்தார்.
இந்த 5 லட்சத்தை வழக்கு செலவாக லைக்கா நிறுவனம் விஷாலுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த பணத்தை ஏழை மாணவிகளின் கல்வி செலவுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு அபராதம் மூலம் கிடைக்கும் 5 லட்சத்தையும் தேவி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவேன். என்றார்.