சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி |
தமிழ் சினிமா உலகில் தரமான பல படங்களைக் கொடுத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். 'ஈட்டி, ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
படம் பற்றி விஷால், “இதோ ஆரம்பிக்கிறோம்! மதகஜராஜா வெற்றியைத் தொடர்ந்து, எனது அடுத்த படமான விஷால் 35ஐ சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் 99வது படமாக, இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்குகிறோம். இது எங்களின் முதல் கூட்டணி. முதன்முறையாக என்னுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் துஷாரா விஜயன், மதகஜராஜா படத்திற்குப் பிறகு மீண்டும் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவாளராகவும், மார்க் ஆண்டனி படத்திற்குப் பிறகு என் அன்பு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராகவும் இணைகிறார்கள். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த், தயாரிப்பு வடிவமைப்பு துரைராஜ், ஸ்டைலிங் வாசுகி பாஸ்கர்.
அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர். முழு நேர்மறை ஆற்றலுடன், உங்களின் ஆசிர்வாதமும் ஆதரவும் கொண்டு சென்னையில் 45 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். இந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இறைவன் ஆசீர்வதிக்கட்டும்!,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.