'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

விஷால் நடித்து வெளிவந்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. 2018ல் தனுஸ்ரீ, பிரபல ஹிந்தி நடிகரான நானா படேகர் மீது 'மீடூ' புகார் அளித்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாக அது இருந்தது. அதன்பின் நடந்த விசாரணையில், தீங்கிழைக்கும் நோக்கத்துடன், பழிவாங்கும் உணர்வால் தனுஸ்ரீ அந்தப் புகாரைத் தெரிவித்திருக்கலாம் என மும்பை, ஓஷிவரா காவல் நிலைய அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், தனுஸ்ரீ அவரது இன்ஸ்டா தளத்தில் அழுது கொண்டே பேசிய வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“என் வீட்டில் வினோதமான சத்தங்களை எதிர்கொண்டு வருகிறேன். 2020ம் ஆண்டு முதல் தினமும் வித்தியாசமான நேரங்களில் என் வீட்டின் மேலேயும், கதவுக்கு வெளியேயும் வினோதமான உரத்த சத்தங்களை அனுபவித்து வருகிறேன். கட்டிட மேலாண்மைக்கு புகார் செய்து சோர்வடைந்து, சில ஆண்டுங்களுக்கு முன்பு அதை விட்டுவிட்டேன்.
இப்போது நான் அதனுடன் வாழ்ந்து, என் மனதை திசை திருப்பி மனநிலையை பாதுகாக்க இந்து மந்திரங்கள் இசையுடன் கூடிய ஹெட்போன்களை அணிகிறேன். இன்று நான் மிகவும் உடல்நலமில்லாமல் இருந்தேன். கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் எதிர்கொள்வதால் நான் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (Chronic Fatigue Syndrome) உருவாகியுள்ளது. இன்றும் அது நீண்டநேரம் நீடித்தது” என்று அந்த சத்தங்களைப் பகிர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு வீடியோவில், “சொந்த வீட்டிலேயே எனக்கு கொடுமை நடக்கிறது. இந்த தொல்லையால் நான் மனமுடைந்து விட்டேன். 2018ல் ‛மீ டூ' புகார் முதல் இது நடந்து கொண்டிருக்கிறது. வெறுப்படைந்து நான் காவல்துறையை அழைத்தேன். தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்கள் ! தாமதமாகும் முன் ஏதாவது செய்யுங்கள்” என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.