பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சென்னையில் நடந்த ‛ரெட் பிளவர்' படவிழாவில் பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், இனி வரும் காலங்களில் முதல் 3 நாட்கள், தியேட்டர் வாசல்களில் பப்ளிக் ரிவியூ எடுக்க யு-டியூப் சேனல்கள், மீடியாவை அனுமதிக்ககூடாது. இதற்கு தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். முதல் 3 நாட்கள் படம் ஓடினால் நல்லது. அடுத்த வசூலையும் இப்படிப்பட்ட ரிவியூ கெடுத்து விடுகின்றன என்று பேசினார்.
விஷால் பேச்சுக்கு ஓரளவு ஆதரவும், நிறைய எதிர்ப்பும் வந்தன. குறிப்பாக, சினிமாவில் உள்ளவர்கள் விஷால் சொல்வதை ஏற்க முடியாது. சின்ன படங்களுக்கு பப்ளிக் ரிவியூ அவசியம், படம் நல்லா இருந்தால் ஓடும், இல்லாவிட்டால் என்ன செய்தாலும் ஓடாது என்றனர்.
விஷால் பேசியபின் பல படங்கள் வந்துவிட்டன. அந்த சமயங்களில் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் தியேட்டர் வளாகத்தில் பேட்டி எடுக்க யாரும் தடை விதிக்கவில்லை. எந்த சினிமா சங்கமும் இந்த விஷயத்தில் கூடி பேசி எந்த முடிவும் எடுக்கவில்லை. விஷால் பேச்சை பலரும் நிராகரித்துவிட்டதாகவே தெரிகிறது.