கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் படம் ஒன்றை இயக்குனர் ஸாக் ஹாரிஸ் என்பவர் இயக்கி வருகிறார். இதில் தமிழில் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் கதிர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடிக்கின்றனர். கதாநாயகியாக கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா நடிக்கின்றனர்.
இரண்டு மொழிகளுக்கும் பொதுவான கதாபாத்திரங்களில் நரேன், ஜான் விஜய், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இருமொழியில் படமானாலும் இதன் தமிழ் பதிப்பு சென்னையிலும், மலையாள கதை கொச்சியிலும் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் படபிடிப்பை முடித்த படக்குழுவினர் கடைசி நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.