ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படம் தான் நரகாசூரன்.. அரவிந்த்சாமி, சந்தீப், இந்திரஜித் என முக்கிய ஹீரோக்கள் இதில் நடித்துள்ள இந்தப்படம் கடந்த நான்கு வருடங்களாக ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது. இந்தப்படத்தை இணைந்து தயாரித்த இயக்குனர் கவுதம் மேனன் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கியிருந்ததால் அதன் காரணமாக இந்தப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் நீடித்தது.
இந்தநிலையில் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட்-13ல் இந்தப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கூட பைனான்சியர்களிடம் இருந்து இந்தப்படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதனால் ஆக-13ல் நரகாசூரன் வெளியாவது சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.