ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படம் தான் நரகாசூரன்.. அரவிந்த்சாமி, சந்தீப், இந்திரஜித் என முக்கிய ஹீரோக்கள் இதில் நடித்துள்ள இந்தப்படம் கடந்த நான்கு வருடங்களாக ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது. இந்தப்படத்தை இணைந்து தயாரித்த இயக்குனர் கவுதம் மேனன் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கியிருந்ததால் அதன் காரணமாக இந்தப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் நீடித்தது.
இந்தநிலையில் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட்-13ல் இந்தப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கூட பைனான்சியர்களிடம் இருந்து இந்தப்படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதனால் ஆக-13ல் நரகாசூரன் வெளியாவது சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.