ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படம் தான் நரகாசூரன்.. அரவிந்த்சாமி, சந்தீப், இந்திரஜித் என முக்கிய ஹீரோக்கள் இதில் நடித்துள்ள இந்தப்படம் கடந்த நான்கு வருடங்களாக ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது. இந்தப்படத்தை இணைந்து தயாரித்த இயக்குனர் கவுதம் மேனன் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கியிருந்ததால் அதன் காரணமாக இந்தப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் நீடித்தது.
இந்தநிலையில் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட்-13ல் இந்தப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கூட பைனான்சியர்களிடம் இருந்து இந்தப்படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதனால் ஆக-13ல் நரகாசூரன் வெளியாவது சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.