நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
கடந்த வருடம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம், தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. பிஜுமேனன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் நடித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் ராணாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தற்போது நித்யா மேனன் இணைந்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அந்த இரண்டு கதாநாயகிகளில் இவர் யாருடைய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பது பற்றிய தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அதில் பிரித்விராஜ் மனைவியாக சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவரது மனைவியாக நடிப்பார் என்றே தெரிகிறது.
காரணம் கதைப்படி கிராமத்து பெண்ணாக போலீஸ் அதிகாரியின் மனைவி என்றாலும், அதேசமயம் நியாயத்துக்காக போராடும் நக்ஸலைட் போலத்தான் அந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஒரிஜினலில் அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது.