Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகிஸ்தான் விருதை திருப்பி தர மறுத்த திலீப் குமார்

07 ஜூலை, 2021 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Dilip-kumar-denied-to-return-pakistan-award

இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-ல் பெற்றவர் மறைந்த திலீப் குமார். மத்திய அரசின் பத்மபூஷண், பத்ம விபூஷண் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகராவார் மற்றும் பிலிம்பேர் விருதுகள் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.

1993ல் அவர் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுவென்றார். 1997ல் அவர் என்டிஆர் தேசிய விருது பெற்றார். அவருக்கு 2009ல் சிஎன்என் - ஐபிஎன் உடைய வருடத்தின் சிறந்த இந்தியன் - வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதிகபட்ச விருதுகளை வாங்கிய நடிகர் என, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். திலீப் குமார் நடிகர் என்பதைத் தாண்டி மனித நேயமிக்கவராக விளங்கினார். இந்திய மற்றும் பாகிஸ்தானிய மக்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க பாடுபட்டார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

1998ல் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மிக உயரிய சிவிலியன் விருதான நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு இந்த விருதை பெற்றவர் திலீப் குமார் தான். கார்கில் யுத்தம் நடந்தபோது, சிவசேனா தலைவர் பால்தாக்கரே திலீப் குமாரை நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருதைத் திருப்பித்தர வலியுறுத்தினார். அதற்கு திலீப் குமார் 'இந்த விருது எனது மனிதாபிமான செயல்களுக்காக தரப்பட்டது. அதற்கென என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். ஏழைகளுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கிடையே பண்பாடு மற்றும் இன இடைவெளிகளுக்குப் பாலம் அமைக்கும் பணியை பல்லாண்டு காலமாகவே செய்து வருகின்றேன். அரசியல் மற்றும் மதம் தான் இத்தகு எல்லைகளை உருவாக்கியுள்ளன. எப்படியாவது இருநாட்டு மக்கள் ஒன்றுபட என்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கின்றேன். எனக்குச் சொல்லுங்கள், இது கார்கில் சண்டைக்கு எவ்வகையில் உதவும்?' என்று கேட்டதுடன் விருதை திருப்பி அளிக்க மறுத்துவிட்டார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நவராத்திரி ரீமேக்கில் நடிக்க மறுத்த திலீப் குமார்நவராத்திரி ரீமேக்கில் நடிக்க மறுத்த ... தனுஷுக்கு அழுத்தம் தரும் தமிழ் தயாரிப்பாளர்கள் தனுஷுக்கு அழுத்தம் தரும் தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
11 ஜூலை, 2021 - 14:29 Report Abuse
Rasheel அவர் ஒரு நல்ல நடிகர். தேச பற்று என்பது வேறு. மும்பை நகரில் குண்டு வைத்து பல நூறு பேர் இரண்டு பொது அந்த விருதை திருப்பீ தந்து இருக்க வேண்டும். அது மத பற்று தேச பற்றை விட மேலானது என்று நினைக்கும் சிலரால் நடக்காது. மும்பை குண்டு வெடிப்பில் இரண்தவரில் முஸ்லிமும் அடக்கம்.
Rate this:
vijay - coimbatore,இந்தியா
10 ஜூலை, 2021 - 11:32 Report Abuse
vijay போலி மதச்சார்பின்மை அரசியலையே வேரறுப்போம். எப்படி கீது ராஜவேலு சார்?
Rate this:
Girija - Chennai,இந்தியா
08 ஜூலை, 2021 - 09:43 Report Abuse
Girija சுயநலம், இந்த விருதின் மூலம் பாகிஸ்தான் அரசு உபசாரம், இலவச விமான பயணம் போன்றவை கிடைக்கும் அதனால் தான் திருப்பி தரவில்லை, உண்மையான இந்தியராக இருந்திருந்தால் தீவிரவாதத்தை தூண்டும் உங்கள நாட்டின் விருது எனக்கு தேவையில்லை என்று திருப்பி தந்திருக்க வேண்டும் . என்ன இருந்தாலும் கபில் தேவ் போல வருமா?
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)இவ்வளவு கேவலமா சிந்திக்க சங்கிகளால் தான் முடியும்....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10 ஜூலை, 2021 - 05:43Report Abuse
Sanny Girija ஜி, நீங்க சொல்லும் சுயநலம் உங்கள் சுயநலம் போல இருக்கு, திலீப் குமார் மனித நேயத்தை பற்றித்தான் சொன்னார். முதலில் மனிதனாக இருக்கப்பழகனும்....
Rate this:
வெற்றி வேல் - -மதராஸ்:-),,இந்தியா
08 ஜூலை, 2021 - 08:50 Report Abuse
வெற்றி வேல் ஒரு முசுலீமு என்று புருவ் பண்ணியவர் என்று போட்டால் போதாதா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in