நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்','டிரெயின்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகை சார்மி உடன் இணைந்து பூரி ஜெகன்நாத் தயாரிக்கவும் செய்கிறார். முக்கியே வேடத்தில் தபு நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இப்படியான நிலையில் அவர் இயக்கத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ''என்னுடைய இயக்குநர்கள் முன்பு செய்த படைப்புகளை வைத்து அவர்களை நான் மதிப்பிட மாட்டேன். எனக்கு கதைப் பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்திரைப்படம் ஒரு முழுமையான அக்ஷன் படமாக இருக்கும். இப்படியான ஒரு கதை களத்தில் இதற்கு முன் நான் படம் நடிக்கவில்லை. நான் செய்த விஷயங்களையே மீண்டும் செய்யாமல் பயணிக்காத களங்களுக்கும் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறோம்" என கூறினார்.