லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த அவரது இணை தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் கடன் பிரச்சினையால் ஏற்பட்ட தொல்லை காரணமாக 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சினிமா பைனான்சியர் போத்ரா, தன்னிடம் கடன் வாங்குபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று பத்திரிக்கை ஒன்றில் பேட்டி அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதையடுத்து அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் பைனான்சியர் போத்ரா.
இந்நிலையில் போத்ரா இறந்து விட்ட நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.