ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கமலுக்கு மேக்கப் அலர்ஜி, படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்கள் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. அதையடுத்து ஒரு வருடமாக பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது லைகா நிறுவனம்.
இதனால் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடிக்க தொடங்க, ஷங்கரோ தெலுங்கு, ஹிந்தியில் புதிய படங்களை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கினார். இதனால் இந்தியன்-2வை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க செல்லக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடி தடை போட்டது லைகா நிறுவனம்.
அதையடுத்து, லைகா நிறுவனமும், டைரக்டர் ஷங்கரும் இந்த பிரச்சினை பேசி சுமூக முடிவுக்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்காரணமாக, இன்று இந்தியன்-2 வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இருதரப்பினருக்குமிடையே பேசி தீர்த்து தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை நீதிபதி சதீஷ்குமார் நியமித்துள்ளார். இவர் லைகா நிறுவனம்-டைரக்டர் ஷங்கருக்கிடையே மத்தியஸ்தம் பேசி அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், இந்தியன்-2 விவகாரம் குறித்த இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.