இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இந்தியன்-2 படத்தை இயக்கி முடிக்காமல் புதிய படவேலைகளை டைரக்டர் ஷங்கர் தொடங்கியதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மேலும் தெலுங்கு சினிமா கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் விஷால் நடித்த சண்டக்கோழி-2 படத்தை அடுத்து தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி.
இந்த நேரத்தில் தங்களிடம் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு ஒரு படத்தை இயக்கி தந்த பிறகுதான் வேறு படத்தை லிங்குசாமி இயக்க வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா சேம்பரில் புகார் அளித்துள்ளார்.
அதாவது, கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை எடுத்தபோது லிங்குசாமிக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது அவருக்கு பண உதவி செய்தாராம் ஞானவேல்ராஜா. ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் அவரிடத்தில் வாங்கிய பணத்தை லிங்குசாமியினால் திருப்பி தர முடியவில்லையாம்.
அதனால் தன்னிடம் வாங்கிய பணத்திற்கு தனது நிறுவனத்திற்கு ஒருபடம் இயக்கித் தருமாறு அப்போது கூறியிருக்கிறார் ஞானவேல்ராஜா. ஆனபோதிலும் லிங்குசாமி தெலுங்கு படவேலைகளை தொடங்கியதால் தான் அவர் மீது தற்போது புகார் அளித்துள்ளாராம் ஞானவேல்ராஜா. அதேசமயம் தெலுங்கு பிலிம் சேம்பரில் ஞானவேல்ராஜா உறுப்பினராக இல்லை என்பதால், அவர் கொடுத்த புகாரின் பேரில் லிங்குசாமிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.