இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி , பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவரது இயக்கத்தில் அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
சமீபகாலமாக லிங்குசாமி அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் லிங்குசாமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜூனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 700 கோடி பட்ஜெட், தற்போது எல்லா தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. இதனால் பெரிய போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வர முடியும். மகாபாரதம் என்றால் நமக்கு பி.ஆர். சோப்ராவின் படைப்பு தான் நினைவுக்கு வரும். அது மாதிரி வேலை எனக்கு வந்துள்ளது. சீக்கிரம் அதற்கான அறிவிப்பு வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.