அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி , பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவரது இயக்கத்தில் அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
சமீபகாலமாக லிங்குசாமி அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் லிங்குசாமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜூனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 700 கோடி பட்ஜெட், தற்போது எல்லா தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. இதனால் பெரிய போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வர முடியும். மகாபாரதம் என்றால் நமக்கு பி.ஆர். சோப்ராவின் படைப்பு தான் நினைவுக்கு வரும். அது மாதிரி வேலை எனக்கு வந்துள்ளது. சீக்கிரம் அதற்கான அறிவிப்பு வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.