நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் | மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி | மோசடி வழக்கில் வில்லன் நடிகர் பாபுராஜ் கைது |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து தமிழில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பைப் பெற்ற படம் 'அசுரன்'. இப்படத்தை தெலுங்கில் 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள்.
தமிழில் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தாணு, தெலுங்கில் சுரேஷ் பாபுவுடன் இணைந்து தயாரித்தார். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் வெங்கடேஷ், பிரியாமணி மற்றும் பலர் நடித்தனர். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து கடந்த மே மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தை வெளியிட முடியவில்லை. இதனிடையே, இப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிடும் உரிமை அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று தான் தயாரிப்பாளர் சுரேஷ் காத்திருந்தாராம். ஆனால், மூன்றாவது அலையும் வரும் என சொல்லப்பட்டு வருவதால் தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகத்தால் ஓடிடியில் வெளியிட அவர் முடிவு செய்ததாகச் சொல்கிறார்கள்.
அவரது தயாரிப்பில், வெங்கடேஷ் நடித்துள்ள மற்றொரு படமான 'த்ரிஷ்யம் 2' படத்தையும் ஓடிடியில் தான் நேரடியாக வெளியிட உள்ளார்கள். வெங்கடேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து நேரடி ஓடிடி வெளியீடு தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மற்றொரு தயாரிப்பான அவரது மகன் ராணா டகுபட்டி, சாய் பல்லவி நடித்துள்ள 'விராட பர்வம்' படத்தையும் அவர் நேரடி ஓடிடி வெளியீட்டிற்கு கொடுத்துவிட்டார் என்றும் தகவல். அதற்காக மூன்று படங்களையும் சேர்த்து பெரும் தொகையை வாங்கி லாபமடைந்துவிட்டார் என்கிறார்கள்.