ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

சமீபகாலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டில் ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருநபர் தான் இப்படியொரு தகவலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்ததாக தெரிய வந்தது.
இந்தநிலையில் நேற்று சென்னையில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதையடுத்து அஜித்தின் வீட்டிற்கு போலீசார் சோதனை செய்ததாகவும், ஆனால் அது புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.