ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் வில்லன் நடிகரான சோனு சூட், ரியல் ஹீரோவாக மாறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். அந்தவகையில் தற்போது கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு, அவசிய தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார் சோனு சூட். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதற்காகவே கர்னூல் பகுதியில் தனியாக உற்பத்தி கூடமே ஆரம்பித்துள்ளார் சோனு சூட்.
இன்னொரு பக்கம் கொரோனாவால் இறக்கும் மக்களை உடனுக்குடன் தகனம் செய்யவோ அல்லது புதைக்கவோ முடியாமல் கால தாமதம் ஏற்படும் சூழல் பல கிராமங்களில் நிலவுகிறது. இதனை குறிப்பிட்டு சோனு சூட்டிடம் உதவி கேட்டு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்கு இறந்த உடல்களை அவர்களுக்கான இறுதிச்சடங்கு நடக்கும் வரை பத்திரப்படுத்தி வைக்கும் விதமாக ப்ரீசர் பாக்ஸ் எனப்படும் குளிரூட்டும் பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட்.