விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் வில்லன் நடிகரான சோனு சூட், ரியல் ஹீரோவாக மாறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். அந்தவகையில் தற்போது கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு, அவசிய தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார் சோனு சூட். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதற்காகவே கர்னூல் பகுதியில் தனியாக உற்பத்தி கூடமே ஆரம்பித்துள்ளார் சோனு சூட்.
இன்னொரு பக்கம் கொரோனாவால் இறக்கும் மக்களை உடனுக்குடன் தகனம் செய்யவோ அல்லது புதைக்கவோ முடியாமல் கால தாமதம் ஏற்படும் சூழல் பல கிராமங்களில் நிலவுகிறது. இதனை குறிப்பிட்டு சோனு சூட்டிடம் உதவி கேட்டு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்கு இறந்த உடல்களை அவர்களுக்கான இறுதிச்சடங்கு நடக்கும் வரை பத்திரப்படுத்தி வைக்கும் விதமாக ப்ரீசர் பாக்ஸ் எனப்படும் குளிரூட்டும் பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட்.