சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உள்ள பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தவர் நடிகர் சோனு சூட். அவரது வீட்டில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனையில் 20 கோடிக்கும் அதிகமாக அவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “கடினமான சாலைகளில் கூட எளிதான பயணம் காணப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரின் பிரார்த்தனையும் ஒரு பலனைத் தருகிறது,” என ஹிந்தியில் டுவிட்டரில் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நீங்கள் எப்போதும் உங்கள் பக்கத்தைச் சொல்ல வேண்டியதில்லை, நேரம் வரும். இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக நான் எனது முழு வலிமையுடனும், இதயத்துடனும் உறுதியளித்துள்ளேன். தேவைப்படுபவர்களுக்கு, அவர்களது உயிரைக் காப்பாற்ற எனது அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் காத்திருக்கிறது.
எனது பங்களிப்பை 'பிராண்டு'கள் நன்கொடையாகத் தர வேண்டும் என ஊக்குவித்தேன், அதுதான் எங்களை செல்ல வைக்கிறது. கடந்த நான்கு நாட்களாக விருந்தினர்களை சந்திப்பதில் பிஸியாக இருந்தேன். மீண்டும் திரும்பி வந்துள்ளேன். உங்களுக்கான பணிவான சேவையில் எனது வாழ்க்கை, எனது பயணம் தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீதான வரி ஏய்ப்பு புகாருக்கு பதிலளிக்கும் விதமாக அவரது அறிக்கை அமைந்துள்ளது. அவருடைய பதிவுக்கு ரசிகர்கள் லைக் செய்தும், ரிடுவீட் செய்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.