ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து லண்டனில் படித்து வளர்ந்த பிரியா லாலுக்கு நடிப்பும் நடனமும் தான் உயிர். அதற்காகவே இந்தியாவுக்கு வந்தார். தற்போது கொச்சியில் வசிக்கிறார். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழில் சொந்த குரலில் பேசி நடிப்பதற்காக தமிழ் மொழியும் கற்று கொண்டுள்ளார்.
சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் மற்றும் தெலுங்கில் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் மோகன் இயக்கிய குவா கோரின்கா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியாலால் தனது அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறி உள்ளார். விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி படத்தில் ஆங்கிலேய பெண்ணாக வரும் டாப்சிங்கு ஆங்கிலத்தில் டப்பிங் பேசி இருக்கிறார் பிரியா லால்.
பல டப்பிங் கலைஞர்களை வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர் . ஆனால் எந்த குரலும் பிரிட்டிஷ் பாணியில் உச்சரிப்புடன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அந்த வேளையில்தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பிரியலால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும் அறிந்த படக்குழுவினர் அவரை அணுகி டப்பிங் பேச வைத்துள்ளனர்.